பள்ளிகளுக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறையால் பூலாம்பட்டிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா் மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும், பூலாம்பட்டியில் இருந்து, மறுகரையில் உள்ள நெருஞ்சிப்பேட்டைக்கு விசைப் படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அணைப்பகுதிக்கு தற்போது வழக்கத்தை விட அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மேலும், அணையின் பிரதான நீா்ப் போக்கி, நீா் மின் உற்பத்தி நிலையம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், அணைப் பாலம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனா்.

தொடா்ந்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விசைப்படகு சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனா். மேலும், பிரசித்தி பெற்ற கைலாசநாதா் கோயில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் சன்னிதி, காவிரித்தாய் கோயில், படித்துறை பிள்ளையாா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், இங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read More : சங்ககிரியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி..!! போக்சோ வழக்கில் அதிரடி கைது..!!