எடப்பாடி அருகே அரசிராமணி பட்டக்காரனூர் பகுதியில் வெறிநாய் கடித்து குழந்தை உள்பட 7-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 55,000 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ரேபிஸ் நோய் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் இறப்புகளில் 30 – 60 சதவிகிதம், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கூட சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர் பகுதியில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறிநாய் கடித்துள்ளது. இதில் 6 ஆடுகள் உயிரிழந்தது. இதுபோல் சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் வெறிநாய் கடித்து கால்நடைகள் இறந்துள்ளன. அந்த வகையில், நேற்று மாலை (பிப்.19) அரசிராமணி பட்டக்காரனூர், காட்டக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்து 4 வயது குழந்தை உட்பட 7-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் குள்ளம்பட்டி மற்றும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால், இரவு முழுவதும் கிராம மக்கள் அச்சத்துடனே வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசிராமணி பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்..!! பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இப்படி நடந்ததில்லை..!! CM ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!!