கன்னியாகுமரியில் தந்தைக்காக காத்திருந்த 12ம் வகுப்பு மாணவியை லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்று நண்பருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், அந்த மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், கைப்பந்து போட்டியில் கலந்துகொள்வதற்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

போட்டிகள் முடிவடைந்த பிறகு, டிசம்பர் 27ஆம் தேதி இரவு 9 மணி அளவில் மாணவிகள் கன்னியாகுமரியில் உள்ள தங்கள் பள்ளிக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது, மற்ற மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த மாணவி தன்னை அழைக்க தந்தை இப்போது வந்து விடுவார் எனக் கூறி வெளியே வந்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபர், தான் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிடுவதாக கூறி, அந்த மாணவியை பைக்கில் ஏற்றியுள்ளார். ஆனால், தனது வீட்டிற்கு அழைத்து சென்று, வலுக்கட்டாயமாக மாணவிக்கு கூல் ட்ரிங்ஸ் கொடுத்து குடிக்க வைத்துள்ளார். இதையடுத்து பலாத்காரம் செய்து, பின் நண்பரையும் அத்துமீற அனுமதித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் ரித்தீஷ் குமார், பைசல் கான் ஆகியோர் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில், அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் குமாரை விடுவித்து, பைசலை மட்டும் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

ரித்தீஷ் குமார் கஞ்சா உட்பட போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஈடுபடுபவர் எனவும் கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தின் சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

Readmore: ‘மகன்கள் வளர்ந்துவிட்டனர்’!. இனி அதெல்லாம் வேண்டாம்!. ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை!. அதிரும் தென்காசி!