தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே செக்காரப்பட்டி பகுதியில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவர். 17 வயதான இவர் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த மாணவர், சக மாணவர்கள் முன்பு பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அந்த மாணவனை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளித்து, பிளஸ்-2 மாணவனை மருத்துவர்கள் காப்பாற்றினர். அரசு பள்ளி வளாகத்திலேயே மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரம் குறித்து, தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையாக மாணவன் பொதுத்தேர்வுக்கு பயந்து பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்ச்சித்தார? அல்லது சக மாணவர்கள் மத்தியில் மாணவனை ஆசிரியர்கள் கண்டித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றானா.? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More:இரவோடு இரவாக தரைமட்டமாக்கிய ஓட்டுனர் சங்க அலுவலகம்..! கைலாசநாதர் கோவில் நிர்வாகம் அதிரடி..!!